ஜெர்மனி: ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி 3 பேர் பலி

கோப்புப்படம்
ஜெர்மனியில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
பெர்லின்,
ஜெர்மனியில் ஹன்னோவர் நகரில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில் அதில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அந்த காரில் ஓட்டுநர் மற்றும் 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் பலியாகினர். ரெயிலில் 38 பயணிகளும் நான்கு ரெயில்வே ஊழியர்களும் இருந்தனர், மேலும் ஒருவர் லேசான காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





