சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 5 முதல் 10 மீட்டர் வரை இடம்பெயர்ந்த துருக்கி...!


சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 5 முதல் 10 மீட்டர் வரை இடம்பெயர்ந்த துருக்கி...!
x

சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இஸ்தான்புல்

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17000 தாண்டி உள்ளது.துருக்கியில் குறைந்தது 14,000 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார், அதே நேரத்தில் சிரியாவில் குறைந்தது 3,162 பேர் பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

துருக்கியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அது அமர்ந்திருக்கும் டெக்டோனிக் தகடுகளை மூன்று அடி (10 மீட்டர்) வரை நகர்த்தியிருக்கலாம் என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

இத்தாலிய நில அதிர்வு நிபுணர் பேராசிரியர் கார்லோ டோக்லியோனி இதுபற்றி கூறும்போது, துருக்கி மேற்கு நோக்கி சிரியாவுடன் ஒப்பிடும்போது ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியிருக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய பேராசிரியர் டோக்லியோனி, சிரியாவுடன் ஒப்பிடுகையில், மதிப்பீடுகளில் துருக்கி உண்மையில் ஐந்து முதல் ஆறு மீட்டர் வரை நழுவியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலைக் கழகத்தின் தலைவர், இவை அனைத்தும் ஆரம்ப தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும், மேலும் துல்லியமான தகவல்கள் வரும் நாட்களில் செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் என்றும் கூறினார். இதையடுத்து பேசிய பேராசிரியர் டோக்லியோனி, 190 கிலோமீட்டர் நீளமும் 25 அகலமும் கொண்ட இந்த சிதைவு, நிலத்தை கடுமையாக உலுக்கி, 9 மணி நேர இடைவெளியில் இரண்டு மிகத் தீவிரமான சிகரங்களை எட்டிய வரிசையை ஏற்படுத்தியது.

உண்மையில், பூமி தொடர்ந்து நடுங்கியது. ரிக்டர் அளவுகோலில் 5 -6 டிகிரி அளவுக்கு குறிப்பிடத்தக்க தீவிரத்துடன் அழிந்தது. இதற்கிடையில், எண்ணற்ற சிறிய அதிர்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சில நொடிகளில் நடந்தது. அரேபிய தட்டுக்கு தென்மேற்கு நோக்கி துருக்கி நகர்ந்தது போல் உள்ளது.

நாங்கள் மத்தியதரைக் கடலில் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றான அதிக நில அதிர்வுப் பகுதியைப் பற்றி பேசுகிறோம். கடந்த நூற்றாண்டுகளில் மிகவும் கடுமையான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறினார். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் மூன்று நாட்களுக்குள் மீட்கப்பட்டுள்ளனர் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேரிடர் மற்றும் சுகாதார பேராசிரியர் இலன் கெல்மன் தெரிவித்தார்.


Next Story