கத்தாா் தேசிய அருங்காசியத்தை பாா்வையிட்ட வெங்கையா நாயுடு...!


கத்தாா் தேசிய அருங்காசியத்தை பாா்வையிட்ட  வெங்கையா நாயுடு...!
x

கத்தாா் நாட்டிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்று உள்ளாா்.

தோகா,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் கடைசிக் கட்டமாக கத்தார் நாட்டிற்கு சென்று உள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமரும் உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் அப்துல் அஜிஸ் அல் தானியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதில் வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது, மேலும் அது வளமடைந்து வருகிறது என்றும் கூறினார்.

இந்தியா-கத்தார் வணிக நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.அங்கு வாழும் இந்திய தொழிலதிபா்களை சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா்.

இந்த நிலையில் அவா் தோகாவில் உள்ள கத்தாா் தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்று பாா்வையிட்டாா்.


Next Story