108 சங்காபிஷேக விழா


108 சங்காபிஷேக விழா
x

பழனி பெரியாவுடையார் கோவிலில் 108 சங்காபிேஷக விழா நடந்தது.

திண்டுக்கல்

பழனி கோதைமங்கலம் சண்முகநதி கரையில் பெரியாவுடையார் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கலச பூஜை, விநாயகர் பூஜை, பூர்ணாகுதி மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கலசம் வெளிப்பிரகாரம், உட்பிரகாரங்களில் சுற்றி கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் புனிதநீரால் பெரியாவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. முன்னதாக வருடாபிஷேகத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடத்தப்பட்டது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், தனசேகர், பழனிவேலு, அசோக், செந்தில், சதீஷ், குமரகுரு, சாய்கிருஷ்ணா மருத்துவமனை கீதா சுப்புராஜ் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story