ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
x

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆபத்சகாயேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவார வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story