வாரம் ஒரு அதிசயம்


வாரம்  ஒரு  அதிசயம்
x
தினத்தந்தி 14 March 2017 12:30 AM GMT (Updated: 13 March 2017 1:11 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘பாடலம்’ என்றால் ‘சிவப்பு’ என்றும், ‘அத்ரி’ என்பதற்கு ‘மலை’ என்றும் பொருள். சிவந்த கண்களுடன் கோப முகமாக இந்த மலையில் காட்சியளித்ததால், இவருக்கு இப்பெயர் வந்தது. ஜபாலி மகரிஷி என்பவர் நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த திருமால், அவருக்கு இங்குள்ள மலை மீது பிரதோ‌ஷ நாளில் நரசிம்மராக காட்சியருளினார். இத்தல மூலவரான பாடலாத்ரி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இரு கரத்தில் சங்கு, சக்கரமும், வலது கரத்தில் அபயமும், இடது கரத்தை மடி மீது வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். இந்த மூலவருக்கு, சிவபெருமானைப் போல மூன்று கண்கள் இருப்பது அதிசயமான ஒன்றாகும். மூலவர் குகைக் கோவிலில் வீற்றிருப்பதால், அவரை வலம் வர வேண்டுமானால், சிறிய குன்றினையும் சேர்த்தே வலம் வர முடியும்.

Next Story