அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது


அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 30 Aug 2017 10:51 PM GMT (Updated: 30 Aug 2017 10:51 PM GMT)

அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை( வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியன நடக்கிறது. இதற்கு கீழக்காட்டுவிளை அருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். குருசடி அருட்பணி போர்ஜியோ மறையுரை நிகழ்த்துகிறார்.

2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு அருட்பணி ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். அருட்பணி ஸ்டீபன் மறையுரை நிகழ்த்துகிறார்.

9-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலி அருட்பணி அருள் ஜோசப் தலைமையில் நடக்கிறது. அருட்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரை நிகழ்த்துகிறார்.

9-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அருட்பணி செல்வராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணி ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார்.

10-ந் தேதி காலை 7.45 மணிக்கு ஜெபமாலை, பெருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி மதன் தலைமை தாங்குகிறார். அருட்பணி அருள்ராஜ் மறையுரை ஆற்றுகிறார்.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரபு, பங்கு மக்கள், பங்கு மேய்ப்பு பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

Next Story