இந்த வார விசேஷங்கள்; 17-3-2020 முதல் 23-3-2020 வரை


இந்த வார விசேஷங்கள்; 17-3-2020 முதல் 23-3-2020 வரை
x
தினத்தந்தி 17 March 2020 10:09 AM GMT (Updated: 17 March 2020 10:09 AM GMT)

17-ந் தேதி (செவ்வாய்) உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி திருப்பல்லக்கிலும், சுவாமி- தாயாருடன் வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கோவர்த்தனகிரிபந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரக் காட்சி. 

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு. 

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். 

கீழ்நோக்கு நாள்.


18-ந் தேதி (புதன்)

மன்னார்குடி ராஜகோபால சுவாமி பஞ்சமுக அனுமன் வாகனத்தில், ராமர் திருக்கோலமாய் காட்சியருளல்.

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் திருவீதி உலா.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இரவு புன்னை மர அலங்கார படிச்சட்டத்தில் பவனி.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாள் இருவருக்கும் திருமஞ்சன சேவை.

கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (வியாழன்)

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் வடலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வாகனத்திலும் வீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கண்ட பேரண்ட பட்சிராஜன் அலங்காரமாய் காட்சி தருதல்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் பவனி, வெண்ணெய் தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளிக் குதிரையிலும், தாயார் அலங்கார படி சட்டத்திலுமாக ஆற்றங்கரையில் வேடர்பறி உற்சவம்.

மேல்நோக்கு நாள்.

20-ந் தேதி (வெள்ளி)

சர்வ ஏகாதசி.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை பல்லக்கில் பவனி, இரவு ராஜாங்க அலங்காரம், புஷ்பப் பல்லக்கில் பவனி.

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் கோவிலில் ரத உற்சவம்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

21-ந் தேதி (சனி)

சனிப் பிரதோஷம்.

திருநெல்வேலி டவுண் கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

உப்பலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவரணம், சுவாமி- அம்பாள் புறப்பாடு.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷி முக பர்வதம், பட்டாபிஷேக திருக்கோலமாய் காட்சி தருதல்.

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் தீர்த்தவாரி.

மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

மாத சிவராத்திரி.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரம்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், இரவு சுவாமி- தாயார் புஷ்பக விமானத்தில் பவனி.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில், அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

23-ந் தேதி (திங்கள்)

அமாவாசை.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரியப் பிரபையில் பவனி, வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி அருளல்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று உற்சவம், மாலை புஷ்ப யாகம், இரவு சுவாமி- தாயார் அலங்காரப் படிச் சட்டத்தில் பவனி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

கீழ்நோக்கு நாள்.

Next Story