மகா மந்திரம்: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா


மகா மந்திரம்: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
x
தினத்தந்தி 24 Aug 2021 8:03 AM GMT (Updated: 24 Aug 2021 8:03 AM GMT)

திருமாலை வழிபடும் சமயத்தினர், ‘வைணவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ என்பது அவர்களின் புனிதமான மந்திரமாக கருதப்படுகிறது.

இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டு 16 வார்த்தைகளால் உருவான மந்திரம், ‘மகா மந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

அந்த மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.

ஹரே ராமா ஹரே ராமா

ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

இந்த மந்திரத்தில் உள்ள ‘கிருஷ்ணா, ராமா’ என்ற இரண்டு வார்த்தைகளும், திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும். மேலும் அவை ‘மிக உன்னதமான, ஆனந்தமான’ என்றும் பொருள்படும். ‘ஹரா’ என்பதற்கு சக்தி என்று பொருள். இந்த ‘ஹரா’ என்பதே நாளடைவில் ‘ஹரே’ என்று மாறியதாக சொல்லப்படுகிறது. மேற்கண்ட மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், பக்தர்களின் வேண்டுதல்கள், இறைவனை சென்றடைய வழியேற்படுகிறது.


Next Story