கர்மாவை விடுவிக்கும் 9 விதி


கர்மாவை விடுவிக்கும் 9 விதி
x

மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்ப, துன்பங்கள் நாம் செய்த கர்ம வினைகளின் படியே அமைகின்றன என்பது இந்துமதம் போதிக்கும் ஒரு செய்தியாகும்.

அந்த கர்மாவில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள, ஒன்பது வகையான விதிகளை பின்பற்றி நடந்தாலே போதுமானது. அது என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

* முதல் விதி:- இந்த உலகத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வந்துசேரும்.

* இரண்டாம் விதி:- வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்குத் தேவையானதை நாம்தான் நடத்திச் செல்ல வேண்டும்.

* மூன்றாம் விதி:- சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும்.

* நான்காம் விதி:- நம்மை நாம் மாற்றிக்கொள்ளும் போது, நம் வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும்.

* ஐந்தாம் விதி:- நம் வாழ்க்கையில் நடப்பவற்றிற்கு நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.

* ஆறாம் விதி:- நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

* ஏழாம் விதி:- ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களைப் பற்றி சிந்திக்க முடியாது.

* எட்டாம் விதி:- நம் நடத்தை நமது சிந்தனையையும், செயலையும் பிரதிபலிக்க வேண்டும்.

* ஒன்பதாம் விதி:- நம்முடைய முன்காலத்தையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டுப் போய்விடும்.


Next Story