விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு


விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
x

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் புனவாசலில் மழுப்பெருத்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. அப்போது விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வேளுக்குடி அச்சம் தீர்த்த விநாயகர், லெட்சுமாங்குடி கலிதீர்த்த ராஜவிநாயகர், அதங்குடி நவசக்தி விநாயகர், பழையனூர் வெள்ளை விநாயகர், உச்சுவாடி நர்த்தன விநாயகர் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story