எளிய வாஸ்து பரிகாரங்கள்


எளிய வாஸ்து பரிகாரங்கள்
x

வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது. அப்படி அமையாத வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

* பசு நெய் அல்லது நல்லெண்ணெய்யால் தினமும், மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

* வீட்டை தினமும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* வீட்டில் தினமும் வாசனை திரவியங்கள், சாம்பிராணி, தூபம் போட்டு வர வேண்டும்.

* சங்கு, மயில் இறகு போன்ற பொருட்களை வீட்டில் வைக்கலாம்.

* வீட்டு முன் வாசலில் எலுமிச்சைப் பழம், பச்சை மிளகாய் போன்றவற்றை கட்டி தொங்க விடலாம்.

* ஒரு குவளையில் நீர் வைத்து, அதில் எலுமிச்சைப் பழத்தை போட்டு வைக்கலாம்.

* வீட்டின் நான்கு பக்கங்களிலும் கண்ணாடி அல்லது பீங்கான் குவளையில் கல் உப்பு போட்டு வைக்கவும். வாரம் ஒரு முறை உப்பை மாற்றவும். பழைய உப்பை வாஷ்பேஷனில் கொட்டிவிடவும்.

* தோஷம் உள்ள இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கவும்.

* வீட்டில் கணபதி ஹோமம், வாஸ்து தோஷம் செய்யலாம்.

* வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.

* வாசல் படிகளில் மஞ்சள், குங்குமம் இட வேண்டும். தலைவாசலில் மாவிலை கட்டி தொங்க விடலாம்.

* வீட்டில் துளசி மாடம் அமைப்பது நல்லது. அதனை தினமும் நல்ல முறையில் பராமரித்து வழிபட வேண்டும்.

* ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வேளையில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.

* வீட்டில் தெய்வீக சுலோகங்கள், இறைவனின் நாமங்கள், மந்திரங்களை ஒலிக்க விடலாம்.


Next Story