பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

வேளுக்குடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமிக்கு வடமாலை, அருகம்புல் மாலை சாத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story