வீரசக்தி விநாயகர் கோவில் திருவிழா

திருச்சிற்றம்பலம் அருகே வீரசக்தி விநாயகர் கோவில் திருவிழா நடந்தது.
தஞ்சாவூர்
திருச்சிற்றம்பலம்;
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வீரராகவபுரம் கிராமத்தில் வீரசக்தி விநாயகர் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.இதையொட்டி வீரராகவபுரம் கிராம பக்தர்கள் 9 நாட்கள் விரதம் இருந்து, மாயம்பெருமாள் கோவிலில் இருந்து, காவடி, பால்குடம் எடுத்து சென்று வீரசக்தி விநாயகர் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் வீரராகவபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வீரராகவபுரம் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story