வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமூலர் எழுதிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

அகலிடமாய் அறியாமல் அடங்கும்

உகலிடமாய் நின்ற ஊன் அதனுள்ளே

பகலிடமாம் முன் பாவ வினாசன்

புகலிடமாய் நின்ற புண்ணியன் தானே.

விளக்கம்:-

எல்லா உலகங்களிலும், அதற்கு அப்பாலும் விளங்கும் ஈசன், உயிர்கள் அறியாதவாறு எல்லாம் ஒடுங்கும் ஒடுக்க நிலையில் நிற்கிறார். நம் உடலிலும், சூரியனை இடமாகக் கொண்டு எழுந்தருளி தீவினைகளை எரிப்பார். எல்லா உயிர்க்கும் புகலிடமான புண்ணிய ஆத்மா அவர்.


Next Story