வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் எழுதிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
அகலிடமாய் அறியாமல் அடங்கும்
உகலிடமாய் நின்ற ஊன் அதனுள்ளே
பகலிடமாம் முன் பாவ வினாசன்
புகலிடமாய் நின்ற புண்ணியன் தானே.
விளக்கம்:-
எல்லா உலகங்களிலும், அதற்கு அப்பாலும் விளங்கும் ஈசன், உயிர்கள் அறியாதவாறு எல்லாம் ஒடுங்கும் ஒடுக்க நிலையில் நிற்கிறார். நம் உடலிலும், சூரியனை இடமாகக் கொண்டு எழுந்தருளி தீவினைகளை எரிப்பார். எல்லா உயிர்க்கும் புகலிடமான புண்ணிய ஆத்மா அவர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





