Normal
வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் எழுதிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
அகலிடமாய் அறியாமல் அடங்கும்
உகலிடமாய் நின்ற ஊன் அதனுள்ளே
பகலிடமாம் முன் பாவ வினாசன்
புகலிடமாய் நின்ற புண்ணியன் தானே.
விளக்கம்:-
எல்லா உலகங்களிலும், அதற்கு அப்பாலும் விளங்கும் ஈசன், உயிர்கள் அறியாதவாறு எல்லாம் ஒடுங்கும் ஒடுக்க நிலையில் நிற்கிறார். நம் உடலிலும், சூரியனை இடமாகக் கொண்டு எழுந்தருளி தீவினைகளை எரிப்பார். எல்லா உயிர்க்கும் புகலிடமான புண்ணிய ஆத்மா அவர்.
Related Tags :
Next Story