வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

சிவபெருமானின் பெருமைகளை, தன்னுடைய பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தியவர் திருமூலர். இவர் இயற்றிய நூல் ‘திருமந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

ஆரும் உரைசெய்யலாம் அஞ்சு எழுத்தாலே

ஆரும் அறியாத ஆனந்த ரூபமாம்

பாரும் விசும்பும் பகலும் மதி அதில்

ஊனும் உயிரும் உணர்வதுமாமே.

விளக்கம்:-

ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய'த்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதை ஓதி, மகிழ்ச்சியான உருவத்தை அடையலாம். வான் உலகமும், சந்திரனும், சூரியனும், நம் உடலும், உயிரும், உணர்வுமாக எங்கும் பரந்து விரிந்து நிற்பது அந்த ஐந்தெழுத்து மந்திரமே.


Next Story