திருத்தணி முருகன் கோவில் சிறப்புகள்


திருத்தணி முருகன் கோவில் சிறப்புகள்
x

முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 5-வது படை வீடாக இருக்கும், திருத்தணி முருகப்பெருமானின் ஆலய சிறப்புகள்:

வள்ளலார், கண்ணாடியில் முருகப்பெருமானின் தரிசனத்தைக் கண்டு அருள்பெற்றவர். அந்த முருகப் பெருமான், திருத்தணிகை முருகப்பெருமான் என்பது குறிப்பிடத்தக்கது. திருவருட்பா நூலில் 'சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்' என்ற பாடலில், முருகனின் திருவருள் தரிசனம் பெற்ற அற்புதத்தைப் பற்றி வள்ளலார் கூறியுள்ளார்.

கர்நாடக சங்கீத மேதைகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், ஒருமுறை திருத்தணி வந்தார். மெய்மறந்து உள்ளம் உருகி முருகனை வணங்கி துதித்துக் கொண்டிருந்தபோது ஆறுமுகப்பெருமானே ஒரு சிறுவன் வடிவில் வந்து ஒரு கற்கண்டை தீட்சிதர் வாயில் போட்டதாகவும், அன்று முதல் இவர் அற்புதமான கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.

முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

காதர் என்னும் இஸ்லாமியரால் கட்டப்பட்ட நவாப் மண்டபத்தில் ஆடிக் கிருத்திகை போன்ற திருவிழாக் காலங்களில் இஸ்லாமிய நண்பர்கள் வாத்தியம் இசைக்கின்றனர்.

சேத்துப்பட்டிற்கு (போளூர்) அருகாமையில் உள்ள தேவிகாபுரம் மலையில் குடிகொண்டிருக்கும் சிவனுக்கும் அனுதினமும் வெந்நீர் அபிஷேகம் நடந்து வருகிறது. அதேபோல திருத்தணி கோவிலில் முதல் பிரகாரத்தில் உள்ள பால முருகனுக்கு ஆருத்ரா அன்று வெந்நீர் அபிஷேகம் நடைபெறும்.


Next Story