பால காமாட்சி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா


பால காமாட்சி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
x

பால காமாட்சி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமானை அடுத்த நத்தம் கிராமத்தில் பால காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவி்லில் வைகாசி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story