வேளுக்குடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு


வேளுக்குடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு
x

வேளுக்குடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு வடமாலை, அருகம்புல், எலுமிச்சை மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story