தவணை முறையில் வீட்டுமனை வாங்கும் போது...


தவணை முறையில் வீட்டுமனை வாங்கும் போது...
x
தினத்தந்தி 16 Sept 2017 7:30 AM (Updated: 16 Sept 2017 6:26 AM)
t-max-icont-min-icon

புற நகர்ப்பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளை தவணை முறையில் வாங்கும் போது முதல் தவணை செலுத்தியவுடன் அதற்குரிய அக்ரிமெண்டு போடுவது அவசியம்.

1. புற நகர்ப்பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளை தவணை முறையில் வாங்கும்போது முதல் தவணை செலுத்தியவுடன் அதற்குரிய அக்ரிமெண்டு போடுவது அவசியம்.

2. எத்தனை தவணைகள் செலுத்தப்பட்ட பிறகு குறிப்பிட்ட ஒருவரது பெயருக்கு பத்திர பதிவு செய்து தரப்படும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

3. மேலும், அந்த பத்திரத்தில் உள்ள நுட்பமான மற்றும் தொழில்நுட்ப ரீதியான விஷயங்களை தகுந்த வக்கீல் மூலம் லீகல் ஒப்பீனியன் (LEGAL OPINION) பெற்று கொள்வது அவசியம்.

4. தவணை முறையில் மனைகளை அளிக்கும் நிறுவனம் அல்லது தனி நபர் பற்றிய விவரங்களை தக்க முறையில் கவனித்துக்கொள்வதும் முக்கியமானது. 
1 More update

Next Story