4 வருட திருமண வாழ்வை கொண்டாடிய கோலி - அனுஷ்கா தம்பதி


4 வருட திருமண வாழ்வை கொண்டாடிய கோலி - அனுஷ்கா தம்பதி
x
தினத்தந்தி 12 Dec 2021 10:07 AM GMT (Updated: 12 Dec 2021 10:07 AM GMT)

விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பை ,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி  பாலிவூட் நடிகையும் தனது  காதலியுமான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இந்த வருட தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வாமிகா என பெயரிட்டுள்ள கோலி - அனுஷ்கா தம்பதி இதுவரை அவர்கள் குழந்தையின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிடவில்லை. இவர்கள் இருவரும் திருமணம் செய்து  நேற்றுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதை முன்னிட்டு விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் விராட் கோலி தெரிவித்துள்ளதாவது :

4 வருடங்களாக என் நகைச்சுவைகளையும் என் சோம்பேறித்தனத்தையும் நீ கையாண்டுள்ளாய். 4 வருடங்களாக நான் யாராக இருக்கிறேனோ அதை நீ ஏற்றுக்கொண்டுள்ளாய். நான் எவ்வளவு உன்னை எரிச்சலூட்டினாலும் நீ என்னை நேசித்துள்ளாய்.இந்த 4 ஆண்டுகளிலும்  கடவுள் நம் மீது மிகப்பெரிய ஆசீர்வாதத்தை பொழிந்துள்ளார் . மிகவும் நேர்மையான, அன்பான, துணிச்சலான உன்னை  திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகிறது.உலகம் முழுவதும் எனக்கு எதிராக இருந்தாலும் சரியான விஷயத்தில் துணிச்சலோடு போராட நீ எனக்கு கற்று தந்துள்ளாய். என்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு நான் எப்போதும் உன்னை நேசிப்பேன். அதுமட்டுமின்றி ஒரு குடும்பமாக நமது முதல் ஆண்டு நிறைவை இப்போது கொண்டாடுகிறோம். நமது மகளுடன் நாம் கொண்டாடும் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story