ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது


ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது
x

கோப்புப்படம்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது.

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரில் 2வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், சி.எஸ்.கே - பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்திற்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து ஐ.பி.எல். டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக வினோத்குமார், அசோக் குமார், இமானுவேல், ரூபன், சரவணன் ஆகிய 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள், ரூ.31,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story