ரன் அடிக்கப்படாத பந்துக்கு 500 மரக்கன்று - இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம்


ரன் அடிக்கப்படாத பந்துக்கு 500 மரக்கன்று - இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம்
x

பசுமை விழிப்புணர்வு திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பிளே-ஆப் சுற்றில் இருந்து ரன் அடிக்கப்படாத ஒவ்வொரு பந்துக்கும் (டாட்பால்) 500 மரக்கன்றுகளை நடுவது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

பசுமை விழிப்புணர்வு திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதனால் நேற்றைய சென்னை- குஜராத் ஆட்டத்தின் போது ஸ்கோர் போர்டில் 'டாட் பந்து' இடத்தில் மரச்செடி சின்னத்தை காண்பித்தனர். இந்த ஆட்டத்தில் சென்னை அணி 34 பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story