விமர்சனங்கள் அனைத்து உங்களை வலுப்படுத்தும் - கோலிக்கு உத்வேகம் கொடுக்கும் ஷோயப் அக்தர்..!


விமர்சனங்கள் அனைத்து உங்களை வலுப்படுத்தும் - கோலிக்கு உத்வேகம் கொடுக்கும் ஷோயப் அக்தர்..!
x

நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இஸ்லாமாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபகாலமாக போட்டிகளில் சரிவர விளையாடுவதில்லை என்று விமர்சனங்கள் எழுத்து வருகிறது. கோலி கடைசியாக நவம்பர் 2109-ல் தான் சதம் அடித்துள்ளார். அதன் பின்னர் அவர் சதம் அடிக்கவில்லை.. இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

" 70 சதங்கள் அடிப்பது ஒன்றும் கேண்டி க்ரஷ் விளையாட்டு போல அல்ல; ஒரு தலை சிறந்த வீரரால் மட்டுமே அத்தகைய சாதனையை செய்ய முடியும். விமர்சனங்கள் அனைத்தும் உங்களை வலுப்படுத்தவே செய்யும். நீங்கள் 110 சதங்களை அடிப்பீர்கள் எனது என் கணிப்பு"என்றார்.


Next Story