அர்ஜூன் தெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? - ரோகித் சர்மா பதில்


அர்ஜூன் தெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? - ரோகித் சர்மா பதில்
x

கோப்புப்படம் ANI

நடப்பு ஐ.பி.எல். தொடரிலாவது அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார்.

மும்பை,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று ரோகித் சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ' இது நல்ல கேள்வி. நம்புகிறேன்' என்று ஒற்றை வரியில் பதில் அளித்தார்.

இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது, 'அர்ஜூன், காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன். எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.


Next Story