காயம் காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடர்களில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்


காயம் காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடர்களில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்
x

உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது.

புதுடெல்லி,

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தடுக்க முயற்சித்தபோது இடறிவிழுந்து இடது கணுக்காலில் காயமடைந்தார். காயம் முழுமையாக குணம் அடையாததால், ஹர்திக் பாண்டியா உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது. இந்த இரு தொடர்களிலிருந்தும் ஹர்திக் பாண்டியா விலகி உள்ளார்.

ஹர்திக் பாண்டியா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக குறைந்தது இன்னும் இரண்டு மாதங்களுக்கு விளையாடமாட்டார் என்றும், இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் டி20 தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் வருகிற 23-ந் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.


Next Story