சேப்பாக்கத்தில் சென்னை-ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் - டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்


சேப்பாக்கத்தில் சென்னை-ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் - டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
x

சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12-ந்தேதி சென்னை-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் கடந்த 3-ந்தேதி நடந்த லக்னோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏறக்குறைய 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.

அடுத்ததாக சென்னையில் வருகிற 12-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (இரவு 7.30 மணி) நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,டி, இ கீழ்தளம்) டிக்கெட் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ,3,000 விலைக்குரிய டிக்கெட் (டி, இ மேல்தளம்) ஆன்லைன் மூலமே விற்கப்படும், ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story