லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு...!


லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு...!
x

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை - லக்னோ அணிகள் மோத உள்ளன.

லக்னோ,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சீசனில் முன்பு எப்போதும் இல்லாததை விட பெரும்பாலான ஆட்டங்களின் முடிவுகள் மிகவும் நெருக்கமாக அமைவதால் டாப்-4 இடங்களை பிடிப்பது யார் என்பதை கணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. குறைந்தது 9 வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி 'பிளே-ஆப்' சுற்றை அடைய முடியும்.

இந்நிலையில் தொடரின் இன்றைய நாளில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டுவதில் மழை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் மழை நின்ற பின்னர் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

காயம் காரணமாக கேப்டன் ராகுல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பொறுப்பு கேப்டன் க்ருணால் பாண்ட்யா லக்னோ அணியை வழிநடத்துகிறார்.


Next Story