ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா


ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா
x

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி கொழும்பில் நடக்கிறது. இதையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர்.

கிளம்புவதற்கு முன்பாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தொற்றுக்குள்ளாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மெல்போர்னில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

தனிமைப்படுத்துதலை முடித்துக் கொண்டு 2-வது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிகிறது. அவர் இல்லாத போது உதவி பயிற்சியாளர் மைக்கேல் டி வெனுட்டோ அணியை வழிநடத்துவார்.


Next Story