'தோனி அடுத்த வருடமும் விளையாடுவார்...' பிராவோ சொன்ன தகவல்


தோனி அடுத்த வருடமும் விளையாடுவார்... பிராவோ சொன்ன தகவல்
x

தோனி உறுதியாக அடுத்த வருடம் விளையாடுவார் என சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார்.

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் தோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து தோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. தோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தோனி அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

"தோனி 2024 ஐபிஎல்-லில் 100 சதவீதம் விளையாடுவார். குறிப்பாக இம்பேக்ட் விதி அவரை நீண்ட நாட்களுக்கு விளையாட வைக்கும். ரகானேவும், சிவம் துபேவும் அணிக்கு வலிமை சேர்ப்பதால், தோனியிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கடினமான சூழல்களை எப்படி சமாளிப்பது என்பது தோனிக்கு தெரியும்". இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரக நடைபெற்ற பிளே ஆப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவு குறித்து தோனி கூறுகையில், "மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன். விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன்" என்று அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story