டிரஸ்சிங் ரூம் வீடியோ: ஆவேச விராட் கோலி...! சண்டை போட்ட கம்பீர்...! அபராதம் விதித்த ஐபிஎல்...!


டிரஸ்சிங் ரூம் வீடியோ: ஆவேச விராட் கோலி...! சண்டை போட்ட கம்பீர்...! அபராதம் விதித்த ஐபிஎல்...!
x
தினத்தந்தி 2 May 2023 7:38 AM GMT (Updated: 2 May 2023 7:43 AM GMT)

டிரஸ்சிங் ரூம் வீடியோவில் கவுதம் கம்பீரைப் பார்த்து விராட் கோலி சவால் விடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

பெங்களூரு

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணியை கடைசி பந்தில் லக்னோ அணி வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு பின் லக்னோ அணி வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினர். லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக மைதானத்திற்கு வந்து ஆர்சிபி ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து "keep Quiet" என்று செய்கை செய்தார். இது விராட் கோலியின் தன்மானத்தை சீண்டி பார்க்கும் வகையில் அமைந்தது.

இதனால் லக்னோ மைதானத்தில் களமிறங்கிய நொடி முதலே விராட் கோலி அதீத ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார்.

நவீன் உல் ஹக் களத்தில் இருந்த போது, அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் விராட் கோலி ஷூ-வை காட்டினார்.

அமித் மிஸ்ரா, விராட் கோலியை பார்த்து "எதற்காக இவ்வளவு ஆக்ரோஷம்.. தேவையில்லையே" என்பது போல் கேட்டார். அதனை ஏற்காத விராட் கோலி, நேரடியாக நடுவர் முன்னிலையில் அமித் மிஸ்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆட்டம் முடிவடைந்த பின் வீரர்கள் அனைவரும் கை குலுக்கி விடைபெற்றனர். அப்போது நவீன் உல் ஹக்கிடம் விராட் கோலி கை குலுக்கும் போது ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். இதற்கு நவீன் உல் ஹக் பதிலடி கொடுக்கும் வகையில் பேச, விராட் கோலி பதிலளித்தார். அங்கே மீண்டும் வாக்குவாதம் எழுந்த நிலையில், மேக்ஸ்வெல் நவீன் உல் ஹக்கை கட்டுப்படுத்தினார். அதேபோல் கவுதம் கம்பீருடனும் விராட் கோலி கை குலுக்கும் போது ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

லக்னோ பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி இடையே வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கம்பீர் தனது அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸை கோலியுடன் பேச வேண்டாம் என்று தடுத்தார்.

பெங்களூரு அணியினர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ள டிரஸ்சிங் அறைக்குள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், போட்டிக்குப் பிறகு கம்பீரைப் பற்றி கோலி வெளிப்படையாக பேசுவதைக் காணலாம். "உங்களால் கொடுக்க முடிந்தால், அதை வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் கொடுக்கவே வேண்டாம்" என்று அந்த வீடியோவில் விராட் கோலி கூறுகிறார்.

ஐபிஎல் 2023 சீசனில் ஆர்சிபிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கம்பீர் பெங்களூரு அணியை நோக்கி காட்டிய செய்கையின் எதிரொலி இன்னும் தொடர்கிறது.

ஆட்டம் முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, லக்னோ பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி இடையே வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கம்பீர் தனது அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸை கோலியுடன் பேச வேண்டாம் என்று தடுத்தார்.

நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானது என்று கூறும் கோலி, லக்னோவில், லக்னோ அணியை விட எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்தது என்பது உண்மையில் நம்ப முடியாத உணர்வு. ஒரு அணியாக நாங்கள் எவ்வளவு விரும்பப்படுகிறோம், ரசிகர்கள் நம்மை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது," என்று வீடியோவில கோலி கூறுகிறார்.

லக்னோவில் கோலிக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெசிஸ் மகிழ்ச்சி அடைந்தார். "இது விராட்டின் சிறந்த பதிப்பு, அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அதில் ஒரு பகுதியாக இருப்பது அருமை, நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன், மைதானத்தில் விஷயங்களை அமைதியாக வைத்திருப்பதே எனது வேலை," என்று ஆட்டத்திற்குப் பிறகு டு பிளெசிஸ் கூறினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோலி - கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது. மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், லக்னோ - பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சில மீம்கள் வைரலாகி வருகின்றன.

கர்நாடகாவில் இன்னும் 8 நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில அணியான பெங்களூருவையும், கர்நாடக மக்களுக்கு பிடித்தமான விராட் கோலியையும் பாஜக எம்பி கவுதம் கம்பீர் தொடர்ந்து சீண்டி வருவதாக டுவிட்டரில் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.



Next Story