கேன் வில்லியம்சன் பற்றிய கேள்விக்கு ரச்சின் ரவீந்திராவின் பதிலால் ரசிகர்கள் அதிருப்தி


கேன் வில்லியம்சன் பற்றிய கேள்விக்கு ரச்சின் ரவீந்திராவின் பதிலால் ரசிகர்கள் அதிருப்தி
x

image courtesy; AFP

தினத்தந்தி 7 Feb 2024 3:53 PM GMT (Updated: 7 Feb 2024 4:20 PM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டார்.

வெலிங்டன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இதில் நியூசிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 511 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 118, ரச்சின் ரவீந்திரா 240 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் நீல் பிராண்ட் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா சுமாரான பேட்டிங் செய்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 45 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் மற்றும் மேட் ஹென்ரி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதன் பின் 349 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு179 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மீண்டும் கேன் வில்லியம்சன் சதமடித்து 109 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நீல் பிராண்ட் 2 விக்கெட்கள் எடுத்தார். இறுதியில் 529 ரன்களை சேசிங் செய்த தென் ஆப்பிரிக்கா 247 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 87 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அந்த வகையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவை எளிதாக தோற்கடித்த நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 240 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் உங்களுக்கு நிகராக இப்போட்டியில் 2 சதங்கள் அடித்த கேன் வில்லியம்சனுடன் ஆட்டநாயகன் விருதை பகிர்ந்து கொள்வீர்களா? என்று ரச்சின் ரவீந்திராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் ஏன் கொடுக்கணும் என்ற வகையில் முடியாது என மறுப்பு தெரிவித்த அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"4 - 5 நாட்கள் நின்று கடினமான வேலையை செய்து நம்முடைய திறனுக்கு தகுந்தாற்போல் அணியின் வெற்றியில் பங்காற்றுவது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் இந்த இன்னிங்சை உயரியதாக மதிப்பிடுவேன். ஏனெனில் வெற்றிக்காக நாங்கள் அங்கே கடினமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம்.

கண்டிப்பாக இல்லை (ஆட்டநாயகன் விருது பற்றி). அவர் 31 சதங்கள் அடித்துள்ளார். எனவே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ள நான் அதை அவருக்கு கொடுக்கப் போவதில்லை. எந்த நேரத்திலும் அணியின் வெற்றியில் பங்காற்றுவது எப்போதுமே ஸ்பெஷலாகும்" என்று கூறினார்.

இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி வந்தாலும் பெயரளவில் கூட வில்லியம்சனுடன் விருதை பகிர்ந்து கொள்வேன் என்று அவர் சொல்லாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story