பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு தலைமை தேர்வாளராக ஹரூன் ரஷீத் நியமனம்...!


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு தலைமை தேர்வாளராக ஹரூன் ரஷீத் நியமனம்...!
x

கோப்புப்படம் 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவின் தலைமை தேர்வாளராக ஹரூன் ரஷீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கடந்த மாதம் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஷாகித் அப்ரிடி தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் அப்துல் ரசாக், ராவ் இப்திகார், அஞ்சும் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழுவை அப்ரிதி வழிநடத்துவார். மேலும் தேர்வுக்குழுவுக்கு ஹாரூன் ரஷித் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேசிய தேர்வுக் குழுவின் தலைமை தேர்வாளராக முன்னாள் வீரர் ஹரூன் ரஷீத் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஜாம் சேத்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக்குழுவுக்கு ஹாரூன் தலைமை தாங்குவார். மீதமுள்ள உறுப்பினர்கள் பின்னர் தேட்வு செய்யப்படுவார்கள். என தெரிவித்தார்.


Next Story