ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட வேண்டும்: சொல்கிறார் கவுதம் கம்பீர்


ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட வேண்டும்: சொல்கிறார் கவுதம் கம்பீர்
x
கோப்புப்படம் 

அணி நல்ல நிலையை எட்ட அப்ரிடியின் பந்து வீச்சில் ரன் எடுக்க வேண்டியது அவசியம்’ ’ என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் மோதும் போது அந்த அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்று இந்திய முன்னாள் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஷகீன் அப்ரிடியின் பந்துவீச்சை அடித்து நொறுக்க வேண்டும். அவரது பந்து வீச்சில் ஆட்டமிழந்து விடக்கூடாது என்ற நோக்குடன் தடுப்பாட்டத்தில் ஈடுபட கூடாது.

அணி நல்ல நிலையை எட்ட அவரது பந்து வீச்சில் ரன் எடுக்க வேண்டியது அவசியம்' என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.


Next Story