ஐ.பி.எல். 2024: முகமது ஷமிக்கு பதிலாக தமிழக வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்


ஐ.பி.எல். 2024: முகமது ஷமிக்கு பதிலாக தமிழக வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்
x

image courtesy: AFP

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகியுள்ளார்.

சென்னை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கி கோப்பையை வெல்வதற்காக தயாராகி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு தாவிய நிலையில் முகமது ஷமியும் காயத்தால் விளையாட மாட்டார் என்பது குஜராத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த வருடம் அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்ற அவர் 2023 உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசி இந்தியா பைனல் வரை செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

உலகக்கோப்பையிலேயே லேசான காயத்துடன் விளையாடிய அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து இன்னும் குணமடையாததால் தற்போது ஐபிஎல் 2024 தொடரில் இருந்து அவர் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக குஜராத் அணி அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஷமிக்கு பதிலாக தமிழக வீரர் சந்தீப் வாரியாரை ரூ. 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு ஒப்பந்தம் செய்து குஜராத் அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story