ஐ.பி.எல்.: பஞ்சாப் அணிக்கு எதிராக லக்னோ பேட்டிங் தேர்வு


ஐ.பி.எல்.: பஞ்சாப் அணிக்கு எதிராக லக்னோ பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல். ராகுல் இந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்குவார் என பூரன் தெரிவித்துள்ளார்.


Next Story