ஐசிசி-யின் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தட்டி சென்ற அயர்லாந்து வீரர்...!


ஐசிசி-யின் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தட்டி சென்ற அயர்லாந்து வீரர்...!
x

ஐசிசி-யின் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது தாய்லாந்து வீராங்கனைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் மேமாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசம், வங்காளதேசத்தின் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

மேலும், மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இலங்கையின் சாமரி அதபத்து, ஹர்ஷிதா மாதவி ஆகியோரும், தாய்லாந்தின் திபாட்சா புத்தாவோங் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அயர்லாந்தின் ஹாரி டெக்டருக்கும், மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது தாய்லாந்தின் திபாட்சா புத்தாவோங்குக்கும் வழங்கப்பட்டுள்ளது.




Next Story