இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 : "வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்" - ஜோஸ் பட்லர்


இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 : வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம் - ஜோஸ் பட்லர்
x

Image Tweeted By @ICC

முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

சவுத்தம்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. .இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடர் சமனில் முடிந்தது. இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் சமீபத்தில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டார். இன்று நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பட்லர் படை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டி குறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில், " எட்ஜ்பாஸ்டனில் எங்கள் அணியின் வெற்றி பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. அந்த டெஸ்ட் அணியின் சிறந்த அம்சங்களை எடுத்துக்கொண்டு எங்களின் வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்" என தெரிவித்தார்.


Next Story