ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்: நெல்லை நாடார் அணி வெற்றி


ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்: நெல்லை நாடார் அணி வெற்றி
x

கோப்புப்படம் 

நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை நாடார் பள்ளி அணி, எபினேசர் மார்கஸ் பள்ளியை எதிர்கொண்டது.

சென்னை,

இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் பள்ளிகளுக்கு இடையிலான 8-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நெல்லை நாடார் பள்ளி அணி, எபினேசர் மார்கஸ் பள்ளியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த நெல்லை நாடார் அணி 3 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தமிழ்செல்வன் 91 ரன்களும், கிரிஷ் 77 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய எபினேசர் மார்கஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 61 ரன்கள் மட்டும் எடுத்து 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் எழும்பூர் டான் போஸ்கோ, புதூர் அரசு பள்ளி, செயின்ட் பீட்ஸ் அணிகளும் வெற்றி பெற்றன.


Next Story