தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர் : கேஎல் ராகுல் விலகல் ; கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்


தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர் : கேஎல் ராகுல் விலகல் ; கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
x

ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செய்லபடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நாளை தொடங்குகிறது.

ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியை கேஎல் ராகுல் வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகியுள்ளார்.

அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story