கடைசி டி20 : இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு


கடைசி டி20 : இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் 'டாஸ்' கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது;. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story