வலுவான அணியாக மீண்டும் வருவோம்: லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் நம்பிக்கை


வலுவான அணியாக மீண்டும் வருவோம்: லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் நம்பிக்கை
x

நாங்கள் வலுவான அணியாக மீண்டும் வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதில் நேற்று நடைபெற்ற வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோவும் பெங்களூரு அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முந்தைய போட்டிக்குள் நுழைந்தது. இதனால், பிளே ஆப் சுற்றுடன் லக்னோ அணி வெளியேறியது.

இந்த நிலையில், லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் காம்பீர் இன்ஸ்டாகிராமில் லக்னோ அணி குறித்து கூறுகையில், இந்த தொடர் எங்கள் அணிக்கு சிறப்பானதாக அமைந்தது. ஆனால் இந்த போட்டியில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. நாங்கள் வலுவான அணியாக மீண்டும் வருவோம். இவ்வாறு கவுதம் கம்பீர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


Next Story