ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி; டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு


ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி; டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 2 March 2024 4:27 AM GMT (Updated: 2 March 2024 4:30 AM GMT)

டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கிய ஒரு அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணியை (5 நாள் ஆட்டம்) எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தமிழ்நாடு அணி:

என். ஜெகதீசன், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித் , பிரதோஷ் , விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர்(கேப்டன்), எம்.முகமது, எஸ்.அஜித் ராம், சந்தீப் வாரியர், குல்தீப் சென்.

மும்பை அணி :

பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ்அய்யர், பூபன் லால்வானி, அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), முஷீர் கான், ஷம்ஸ் முலானி, ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோடியான், மோகித் அவஸ்தி, துஷார் தேஷ்பாண்டே


Next Story