ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-டெல்லி அணிகள் இன்று மோதல்


ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-டெல்லி அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம்

ரஞ்சி கிரிக்கெட்போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன.

புதுடெல்லி,

38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடக்கிறது. இதில் டெல்லியில் இன்று தொடங்கும் ஒரு லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) பாபா இந்திரஜித் தலைமையிலான தமிழக அணி, டெல்லியை எதிர்கொள்கிறது.

தனது தொடக்க லீக்கில் ஐதராபாத்துடன் டிரா கண்ட தமிழக அணி 2-வது ஆட்டத்தில் ஆந்திராவிடம் 8 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்யும் வேட்கையில் உள்ள தமிழக அணியில் என்.ஜெகதீசன், சாய் சுதர்சன், பாபா அபராஜித், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.

டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் காயத்தில் சிக்கியுள்ளனர். இதில் இஷாந்த் ஷர்மா, நவ்தீப் சைனி ஆகியோரும் அடங்குவர். இதனால் குழப்பத்தில் உள்ள டெல்லி அணி நிர்வாகம் இளம் பவுலர்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பேட்டிங்கில் அந்த அணியில் துருவ் ஷோரே, கேப்டன் யாஷ் துல், விக்கெட் கீப்பர் அனுஜ் ரவாத் நல்ல நிலையில் உள்ளனர். அதே சமயம் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் கடந்த இரு ஆண்டுகளாக சரிவர ஆடாத பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


Next Story