ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்..! மோசமான சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்..!


ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்..! மோசமான சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்..!
x

Image : AFP 

50 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இத்தகைய மோசமான சாதனையை இதுவரை யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சூரியன்,

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் சரிவில் இருந்து எழுச்சி பெற்ற தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் ஆட்டம் செஞ்சூரியனில் இன்று நடந்து வருகிறது . இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 28 ரன்களும் , குயிண்டன் டி காக் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.' பின்னர் வந்த மார்க்ரம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராஸ்ஸி வான் டெர் டுசென் , ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர் . ரஸ்ஸி வான் டெர் டுசென் நிலைத்து ஆடினார் . அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார் .ஹென்ரிச் கிளாசென் தொடர்ந்து அதிரடி காட்டினார் .

பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்த ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.மறுபுறம் மில்லர் அதிரடி காட்டி அரைசதம் அடித்தார்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்தது.

ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 174 ரன்கள் ( 13 பவுண்டரி , 13 சிக்ஸர் ), டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்கள் ( 6 பவுண்டரி , 5 சிக்ஸர் ) எடுத்தனர். இதனை 417 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது .

இந்த நிலையில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் சாம்பா இன்றைய போட்டியில் சோபிக்கவில்லை. மாறாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனையை படைத்திருக்கிறார். 10 ஓவர்கள் பந்து வீசிய ஆடம் சாம்பா 113 ரன்களை வாரி வழங்கினார்.10 ஓவர்கள் பந்து வீசிய ஆடம் சாம்பா 113 ரன்களை வாரி வழங்கினார்.

ஆடம் சாம்பா பந்துவீச்சில் மட்டும் 8 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஆடம் சாம்பா படைத்து இருக்கிறார். 50 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இத்தகைய மோசமான சாதனையை இதுவரை யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story