இந்த இரு வீரர்களை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்


இந்த இரு வீரர்களை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும்   -  தினேஷ் கார்த்திக்
x

Image Courtesy: AFP 

ஒருநாள் அணியில் ரஜத் படிதாரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6 முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு பற்றி தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் டுவிட்டரில் கூறியதாவது:-

ஒருநாள் அணியில் ரஜத் படிதாரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்புக்கு மிகவும் தகுதியானவர். முகேஷ் குமாருக்கும் வாழ்த்துகள்.

தற்போது சர்பராஸ் கான், இந்திரஜித் பாபாவை டெஸ்ட் அணியின் திட்டங்களில் சேர்க்க வேண்டும். அபாரமாகப் பங்களிப்புகளை, திறமையான வீரர்களைத் (தேர்வுக்குழு) தவிர்க்கக் கூடாது. இருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்றார்.



Next Story