டி.என்.பி.எல். கிரிக்கெட் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்...!


டி.என்.பி.எல். கிரிக்கெட் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்...!
x

Image Courtesy: @TNPremierLeague

டிஎன்பிஎல் தொடரில் லைக்கா கோவை கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 19-வது 'லீக்' ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில் கோவை அணி 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 5-வது வெற்றியாகும்.

இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கோவை கிங்ஸ் முதல் அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை ஜூலை 2-ந்தேதி சந்திக்கிறது. சேலம் அணி 4-வது தோல்வியை தழுவியது. 2 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி 6-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சை 1-ந்தேதி எதிர்கொள்கிறது.

டி.என்.பி.எல். கோட்யின் 20-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

திண்டுக்கல் அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. திருப்பூர் தமிழன்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.


Next Story