டிஎன்பிஎல் கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் இன்று மோதல்


டிஎன்பிஎல் கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் இன்று மோதல்
x

டிஎன்பிஎல் கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் இன்று மோதுகின்றன.

சேலம்,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சை எதிர்கொள்கிறது. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியுடன் மோதும்.

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நெல்லை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் 27-ந் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது தகுதி சுற்று 29-ந்தேதியும், இறுதிப்போட்டி 31-ந்தேதியும் கோவையில் நடக்கிறது.


Next Story