பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு..! மீண்டும் கேப்டனாக களமிறங்கும் விராட் கோலி...!


பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு..! மீண்டும் கேப்டனாக களமிறங்கும் விராட் கோலி...!
x
தினத்தந்தி 20 April 2023 9:39 AM GMT (Updated: 20 April 2023 9:45 AM GMT)

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மொகாலி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொகாலியில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன்

பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

பெங்களுரு அணியின் கேப்டனாக இன்று விராட் கோலி செயல்படுகிறார். டு பிளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்க உள்ளார்.


Next Story