இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 114 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்


இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 114 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
x
தினத்தந்தி 27 July 2023 4:24 PM GMT (Updated: 27 July 2023 5:53 PM GMT)

இந்திய அணியின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் 114 ரன்களில் சுருண்டது.

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. இந்த நிலையில் இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அந்த அணி 23 ஓவர்களில் 114 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 43 ரன்களும் அலிக் அத்தானேஸ் 22 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மேலும் ஹர்திக் பாண்ட்யா, முகேஷ் குமார், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த நிலையில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.


Next Story